இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கீத்தா பரமானந்தம்

தீ!
ஆக்கி அவிக்கும்
ஆற்றலின் மூலம்!
தீப ஒளியாய்ச்
சுடர் விடும் ஞானம்!

மாய வாழ்வின்
பாவம் போக்கிக்
காயம் அழிக்கும்
தூய்மைப் பணியில்
தீயே நீயும்!
கோபம் கொண்டே
கொதிப்புறல் சாபம்!

ஒற்றைத் துளியில்
கற்றையாய்க் கருக்கி
மொத்தமாய் முடிக்கின்றாய்!
வெற்றுக் கூடாய்
வீதியில் நிறுத்தி
வெஞ்சினம் அறுக்கின்றாய்!

நித்தமும் வணங்கும்
பொற்சுடர் என்றே
போற்றிடும் துணையே
விட்டிடு தீயே
வீறாம் அனலை!

உன்றனை விடவும்
நஞ்சுடை மனிதர்
சிந்திடும் வார்த்தை
நெஞ்சினைக் கருக்குது
நித்தமும் தீயாய்!

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading