21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
கீத்த்கா பரமானந்தன்
வலி!
அலையிலாக் கடலுமில்லை
அல்லலில்லா ஆயுளுமில்லை!
கிலிகொண்டு நிற்பதனால்
கிடைப்பது ஏதுமில்லை
வல்லமையைத் துடுப்பாக்க
வென்றிடலாம் வலிகளையே
கல்லையும் கடவுளாக்கி
காற்றலையும் கானமாக்கி
எண்ணற்ற காட்சிகள்
மண்ணிலே சாட்சிகளாய்!
உளிபட்ட கற்களே
உருவாகும் சிலையாக
வலிகொண்ட பாதையினை
வலிமை உழைப்பாலே
வனப்பாக மாற்றி
வாகைசூடி நிற்பவர் நாம்
நலிவினிற் சோரது
நலமாகும் வழிசமைப்போம்!
அழகான பூமியெங்கும்
ஆயிராமாய் வலியிருந்தும்
தளமாக்கி நின்றவர்க்கு
தரணியெங்கும் இன்பமுண்டு!
வலியினை வென்றிட
வலிமையே. மருந்தாகும்
வாழ்வினில் பற்றியே
வசந்தத்தை நிறைப்போம்!
கீத்தா பரமானந்தன்
10-09-24
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...