குழப்பமாய் எனக்குள்ளே

குழப்பமாய் எனக்குள்ளே Srlvi Nithianandan

குழப்பமாய் எனக்குள்ளே

தந்தையின் பெருமை என்றுமே உயர்வு
தரணியில் வந்ததே அமாவாசை சிறப்பு
தந்தை தாய் மகத்தான பிறப்பு
தரம் குன்றா மகுடமாய் இருப்பு

விடுமுறை நாளாம் அமாவாசை வந்திட
விந்தையாய் இன்றுமே வியப்பாய் இருந்திட
கண்ணுக்குள் இன்னுமே இறப்பின் பதியம்
காலத்தால் அழியாத இருப்பின் வதிவிடம்

தளராத நம்பிக்கையில் வாழ்ந்து காட்டியே
அயராத உழைப்பால் முன்னேற்றம் கண்டு
நூறு ஆண்டுகள் பிறப்பின் பெருமையாய்
அரைவாசியில் காலனவன் முடித்தானே வாழ்வை

அனாதைபோல் எனக்குள்ளே என்றும் நினைவு
அமாவாசை நாளும் மெல்லன நகரந்திட
சிதைந்து வாழ்ந்திடல் கடினமாய் எனக்குள்ளே
சித்திரமாய் அகத்திலே சிதையாத நிஜமே

Nada Mohan
Author: Nada Mohan