” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பூக்கும் புத்தாண்டு
———————
பூக்கள் பூத்தது
புதுப் பொலிவுடன்
புத்தாண்டு பிறந்தது
தனிமெருகுடன்
மக்கள் மனதில்
நம்பிக்கை நலம்பெற
மலர்ந்து விரிந்த
புத்தாண்டு சுகம்பெற
கடமை கண்ணியம்
கட்டுப் பாடு பேணி
காக்கும் இந்தப்
பூமியில் ஏதுஅணி
பட்டாசு கொழுத்தி
புத்தாண்டை வரவேற்று
சிட்டுக்கள் தொடக்கம
பெரியோர் வரை. பதிவேற்று
கலகலப்பான புத்தாண்டு
வந்தது வந்தது
கவலைகள் பறந்து
சென்றது சென்றது
புள்ளினங்கள் முதல்
பூதலத்துள்ளோர் வரை
அள்ளி எடுக்க ஆனந்தத்தை
ஆவலுடன் சென்றனர்
ஆணவம் கரைந்தது
அழகும் மிளிர்ந்தது
அத்தனை மனமும்
குளிர்ந்தது மகிழ்ந்தது
பூக்கும் புத்தாண்டில்
புன்னகையோடு
பார்க்கும் மனிதரெல்லாம்
பரவசமாக இருக்கட்டுமே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan