கெங்கா ஸ்ரான்லி

ஆறுமோ ஆவல்
தேறுமோ நிலைஇல்லா வாழ்வு
கூறுமோ அதன் நிலைத்தேர்வு
மாறுமோ உலகியல். வழக்கம்
ஆறுமோ ஆவல் மனத்திலே
ஓடிஓடி உழைத்தும்
உருப்படியாய் ஒன்றுமில்லை
படிப்படியாய் ஏறியும்
படித்த படிப்புக்கு வேலையில்லை
ஏழ்மையில் சுழலும் மக்கள்
எதிர்காலம் என்னவாகும் நினைப்பில்
வாழ்வாதாரமே வசதியோடு வேண்டுமென
வணங்குகிறார் இறையருளை
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆவல்
ஒழுக்கமுள்ள நீதி நேர்மை தூய்மை
தங்குமிடத்தில் தழைக்கும் விதைகள்
பொங்கும் பூமியில் புனித்த்தோடே
நிறைவு காணா மனித மனம்
ஆபறுமோ ஆவல்
அவர்தம் நிலைகண்டே
கெங்கா ஸ்ரான்லி
6.6 23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading