” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
தீப ஒளியே
————-
மங்கல காரிய மணிவிளக்கே
மனதில் தோன்றும் அகலவிளக்கே
எங்கில் பார்க்கிலும் ஒளி வெள்ளமே
ஓங்கி அகற்றும் இருளையே
இருள் அகற்ற ஒளி வீசும் தீபங்கள்
அருள் கொடுக்க ஆண்டவனின் அருளொளி
மருளும் மாந்தன் மனவலி
வெருளும் பயத்தில் முகவொளி
தீவினைகள் எல்லாம் விரண்டோட
பாவ்வினை பறந்தோட
மாயவினை மாயமாக
தேயும் பிறையும் தெய்வீகமாக
தீப ஒளியேற்றி திரட்டிடுவோம் செல்வமதை
தீப ஒளியால் வீட்டையே ஒளிமயமாக்குவோம்
தீப ஒளியின் செம்மையில்
தீரட்டும் தீயவைகள்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
5.11.23

Nada Mohan
Author: Nada Mohan