இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பிறந்த மனை
————-
நான் பிறந்தது என்னவோ
வாடகை வீட்டில் தான்
பின் இரண்டு வீடு மாறி மாறி
எனது தந்தை ஒரு காணி வாங்கி
முதலில் மண் வீடு தான் கட்டினார்
பின்னர் ஒரு கல் வீடு கட்டினார்
மூன்றறை குசினி கால் விறாந்தை
நாம் ஆறு பிள்ளைகள்
நிம்மதி யாக வழ்ந்தோம்
பனை மரம் தான் கூட நின்றன
ஆடு மாடு கோழி என வளர்த்தார்கள்
வன்னியில் இருந்து வரும் அம்மாவின்
உறவுகள் வைத்தியத்திற்கு வந்தால்
எங்கள் வீட்டில் தான் தங்குவது. வழக்கம்
அவர்கள் கூறுவார்கள் அங்கு சொத்து
இருக்கிறது
ஏன் அதைப் பார்க்கவில்லை
இப்படி கஷ்டப் படுகிறயே என
அப்பொழுது எங்கள் வீடுதான்
பெரிய கல் வீடு அந்த ஒழுங்கையில்
இப்போது எங்கள் வீடுதான் சிறிய கல்வீடு
பெரிய பெரிய வீடுகள் வந்துவிட்டன
போர்க் காலத்தில் பழுதடைந்தாலும்
இன்னும் வாழும் இல்லம்
நாம் வாழ்ந்த மனை
அன்னை தந்தையுடன்
ஆனந்தமாக வாழ்ந்த வீடு
மறக்க முடியாத நினைவுகள்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading