” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பிறந்த மனை
————-
நான் பிறந்தது என்னவோ
வாடகை வீட்டில் தான்
பின் இரண்டு வீடு மாறி மாறி
எனது தந்தை ஒரு காணி வாங்கி
முதலில் மண் வீடு தான் கட்டினார்
பின்னர் ஒரு கல் வீடு கட்டினார்
மூன்றறை குசினி கால் விறாந்தை
நாம் ஆறு பிள்ளைகள்
நிம்மதி யாக வழ்ந்தோம்
பனை மரம் தான் கூட நின்றன
ஆடு மாடு கோழி என வளர்த்தார்கள்
வன்னியில் இருந்து வரும் அம்மாவின்
உறவுகள் வைத்தியத்திற்கு வந்தால்
எங்கள் வீட்டில் தான் தங்குவது. வழக்கம்
அவர்கள் கூறுவார்கள் அங்கு சொத்து
இருக்கிறது
ஏன் அதைப் பார்க்கவில்லை
இப்படி கஷ்டப் படுகிறயே என
அப்பொழுது எங்கள் வீடுதான்
பெரிய கல் வீடு அந்த ஒழுங்கையில்
இப்போது எங்கள் வீடுதான் சிறிய கல்வீடு
பெரிய பெரிய வீடுகள் வந்துவிட்டன
போர்க் காலத்தில் பழுதடைந்தாலும்
இன்னும் வாழும் இல்லம்
நாம் வாழ்ந்த மனை
அன்னை தந்தையுடன்
ஆனந்தமாக வாழ்ந்த வீடு
மறக்க முடியாத நினைவுகள்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan