சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பிறந்த மனை
————-
நான் பிறந்தது என்னவோ
வாடகை வீட்டில் தான்
பின் இரண்டு வீடு மாறி மாறி
எனது தந்தை ஒரு காணி வாங்கி
முதலில் மண் வீடு தான் கட்டினார்
பின்னர் ஒரு கல் வீடு கட்டினார்
மூன்றறை குசினி கால் விறாந்தை
நாம் ஆறு பிள்ளைகள்
நிம்மதி யாக வழ்ந்தோம்
பனை மரம் தான் கூட நின்றன
ஆடு மாடு கோழி என வளர்த்தார்கள்
வன்னியில் இருந்து வரும் அம்மாவின்
உறவுகள் வைத்தியத்திற்கு வந்தால்
எங்கள் வீட்டில் தான் தங்குவது. வழக்கம்
அவர்கள் கூறுவார்கள் அங்கு சொத்து
இருக்கிறது
ஏன் அதைப் பார்க்கவில்லை
இப்படி கஷ்டப் படுகிறயே என
அப்பொழுது எங்கள் வீடுதான்
பெரிய கல் வீடு அந்த ஒழுங்கையில்
இப்போது எங்கள் வீடுதான் சிறிய கல்வீடு
பெரிய பெரிய வீடுகள் வந்துவிட்டன
போர்க் காலத்தில் பழுதடைந்தாலும்
இன்னும் வாழும் இல்லம்
நாம் வாழ்ந்த மனை
அன்னை தந்தையுடன்
ஆனந்தமாக வாழ்ந்த வீடு
மறக்க முடியாத நினைவுகள்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading