நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

திமிர்

தமிழர் என்ற திமிர்
செம்மொழி தாய்மொழி
என்ற திமிர்.
உலகளாவிய தமிழ்
பேசப்படும் திமிர்.
அரச பதவியில் பெண்
அதிகாரத்தில் பெண்.
எல்லாத் தொழிலும்
ஏற்றம் கண்டவள்
அதனால் கொண்டாள்
திமிர்.

திமிர் பிடித்த குதிரை
கடிவாளம் பிடிப்பினும்
திமிரும்.
சில மனிதரும் மமதையால்
திமிர் பிடித்து திமிறுகிறார்.
மனித நேயத்திற்குள் திமிர்
எட்டிப் பார்க்காது.
மாந்த இனம் அதற்குள்
தலை வைக்காது.
மனிதரே திமிர் பிடித்து
அலையாதீர்.
திமிர் பிடித்த பெரியவரால்
சில நாடே அழிந்தது
திமிர் விட்டு பாச நேசம்
கொள்ளுங்கள்.
வளமும் வனப்பும்
வாழ்வில் செழிக்கும்

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan