அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

கலகமும் கற்பனையும்

கலகம் இல்லா நாடில்லை.
கலக்கம் இல்லா மனிதரில்லை.
விலக்கும் சில மனிதமும்,
விலங்கு போன்ற செயல்களும்.

கற்பனையில் வளம் கண்ட மனிதர்
கற்றிடும் நற்பண்பு இம் மண்ணில்.
விற்பல விண்ணர் விதைப்பார்
சொற்பல கவிதையில் ஆண்டே.

கலக்கிடும் ஆழ்கடலும் ஒரு நாள்
மிதந்திடும் சேறும் அதனால்.
கலங்கிய மனதின் எண்ணங்கள்
சிதறிடும் சினத்தின் கனலாய்.

கலகமும் கற்பனையும் இணைந்ததே
உயிரினங்களின் ஒட்டு மொத்த வாழ்வு.
காடு மேடு மலை கண்டதும்
இயற்கையின் இந்தத் திறன் தான் கூறு.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading