” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

கலகமும் கற்பனையும்

கலகம் இல்லா நாடில்லை.
கலக்கம் இல்லா மனிதரில்லை.
விலக்கும் சில மனிதமும்,
விலங்கு போன்ற செயல்களும்.

கற்பனையில் வளம் கண்ட மனிதர்
கற்றிடும் நற்பண்பு இம் மண்ணில்.
விற்பல விண்ணர் விதைப்பார்
சொற்பல கவிதையில் ஆண்டே.

கலக்கிடும் ஆழ்கடலும் ஒரு நாள்
மிதந்திடும் சேறும் அதனால்.
கலங்கிய மனதின் எண்ணங்கள்
சிதறிடும் சினத்தின் கனலாய்.

கலகமும் கற்பனையும் இணைந்ததே
உயிரினங்களின் ஒட்டு மொத்த வாழ்வு.
காடு மேடு மலை கண்டதும்
இயற்கையின் இந்தத் திறன் தான் கூறு.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan