மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

உயர்வு யாரிடம்

தன்னைத் தானே
புகழ்ந்து கொள்ளும்
தகுதியில்லா மாந்தரை
இகழ்தல் தகும்.
நன்மை பெறவேண்டின்
நல்லவிதமாகப் பேசிடுவர்.
நன்மையது பெற்றபின்
நயவஞ்சகமாக கழற்றிடுவர்.
பொங்குகின்ற பூமீயில்
புழுக்களின் வேலையது.
தங்கி வைக்கும் செயலுக்கு
தாரக மந்திரமாம்.
உன் செயல் நடப்பதற்கு
ஊர்ச்சனம் வேண்டும் உனக்கு.
உனது செயல் முடிந்துவிட்டால்
ஊதாசீனம் செய்துவிடும்.
நன்றியுடன் வாழும்
ஐந்தறிவு ஜீவன்.
நன்றியை மறந்ததே
ஆறறிவு ஜீவன்.
இதில் பெருந்தன்மை
யாரிடமுள்ளது
ஆறறிவை விட ஐந்தறிவு
உயர்ந்து விட்டதே.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading