இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
கலவரம்
———-
குடும்பத்தில் ஏற்பட்ட கலவரம்
கோர்ட்டு வரை சென்றது
தீர்ப்பு குடும்பம் பிரிவு
தீராத வலி பிள்ளைகளுக்கு
நாட்டில் ஏற்பட்ட கலவரம்
நாட்டு மக்களை இடம் பெயர
வைத்தது
கலவரத்தில் சிக்கிய மக்கள்
கதிகலங்கி நின்ற போது
கைகொடுக்க யாரும் வரவில்லை
வேடிக்கை பார்த்தனர் எல்லா நாடுகளும்
கலவரம் தீர்ந்தது என்றார்கள்
களப்பலி ஆனவர்கள் எம் மக்கள்
மண்ணாசையால் மனதில் ஏற்பட்ட கலவரம்
பெண்ணைக் காயப்படுத்தியதே
சங்க இலக்கிய ம் கூறும் போதனை
இதுவா
கலவரம் இல்லா நாடும்
கலவரம் இல்லா வீடும் உண்டா
இது இயற்கையின் நியதி
இங்கு எதற்கு மீதி
மனதில் ஏற்பட்ட கலவரத்தால்
உள்ளமே உடைந்ததே
மனதின் தெளிவின்மையால் தானே
தெளிவுகள் ப்பிறந்தால் எல்லாமே
கலவரமின்றி சுமூகமாகுமே
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading