இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
வசந்தத்தில் ஓர்நாள்
—————
வசந்தம் வாழ்க்கையில்
இளமையிலொன்று இல்லறத்திலொன்று
சந்தம் தொடரும் சங்கிலியாக
உறவினில் உற்சாகமாய் இருக்கையில்
பெருமிதம் கொண்டங்கு
கற்றதே பலபாடம் கண்குளிர
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
போற்றிடும் அவர் வளர்ப்பு
பூமியில் மெச்சும் அளவு
சாற்றிடும் ஊருமதை நன்றே
தாளாத தண்மை கொண்டு
பூரண நிலவு முற்றத்திலே
பூக்களின் நறுமணம் சிந்துகையிலே
நாற்காலி போட்டு நாமெல்லாம்
நனிமிகு மகிழ்வில் அன்று
வசந்தத்தில் ஒரு நாள் அது
வருமா மீண்டுமது
கெங்கா ஸ்ரான்லி நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading