அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
கெங்கா ஸ்ரான்லி
மூத்தோர்
இதயத்தின் நாதம் இன்னிசை மீட்டிட
இளமை நினைவுகள் இன்ப சாகரத்தில்
எந்தையுடன் வாழ்ந்த காலமது இனிக்க
தந்தையும் தாயும் தம்மையே தந்தனரே
எண்ணி நிதம் சோறு உண்கையில்
தண்ணி தரயாருமில்லை விக்கையில்
எண்ணமாய் மாய்கிறேன் எனது பெற்றோரை
என்றும் என் இதய வானில் பறந்தே
கண்ணாக காத்தவர் கள்ளமில்லா மனத்தவர்
மண்மீது காதல்தானும் மறுஉலகம் சென்றுவிட்டார்
தண்ணிலவாய் தரணியிலே தங்கமாய் சொலித்தவர்
இன்னுமவர் இதயத்தால் நெஞ்சுருக வைத்தவர்
தன்னலமில்லா பெற்றார் பிள்ளைகள் ஆறு
அதில் ஒன்றுதானே நானும்
கண்ணீர் துடைக்க உங்கள் கைகள் தேடுது
காணவோ உள்மனம் ஏங்குது
எண்ணிலடங்கா சோகம் உள்மனதில் வேகுதே
வந்து தணியுங்கள் தாயும் தந்தையும்
சேயின் ஏக்கத்தை
நொந்து மடியும் உமது பிள்ளையின்
சோகத்தை
மூத்தோர் நினைவலை முற்றுமாய்
நினைத்தே முறுகுகிறேன் மனத்தில் மீட்டியே
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
22.3..23 ச
