சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

மூத்தோர்
இதயத்தின் நாதம் இன்னிசை மீட்டிட
இளமை நினைவுகள் இன்ப சாகரத்தில்
எந்தையுடன் வாழ்ந்த காலமது இனிக்க
தந்தையும் தாயும் தம்மையே தந்தனரே
எண்ணி நிதம் சோறு உண்கையில்
தண்ணி தரயாருமில்லை விக்கையில்
எண்ணமாய் மாய்கிறேன் எனது பெற்றோரை
என்றும் என் இதய வானில் பறந்தே
கண்ணாக காத்தவர் கள்ளமில்லா மனத்தவர்
மண்மீது காதல்தானும் மறுஉலகம் சென்றுவிட்டார்
தண்ணிலவாய் தரணியிலே தங்கமாய் சொலித்தவர்
இன்னுமவர் இதயத்தால் நெஞ்சுருக வைத்தவர்
தன்னலமில்லா பெற்றார் பிள்ளைகள் ஆறு
அதில் ஒன்றுதானே நானும்
கண்ணீர் துடைக்க உங்கள் கைகள் தேடுது
காணவோ உள்மனம் ஏங்குது
எண்ணிலடங்கா சோகம் உள்மனதில் வேகுதே
வந்து தணியுங்கள் தாயும் தந்தையும்
சேயின் ஏக்கத்தை
நொந்து மடியும் உமது பிள்ளையின்
சோகத்தை
மூத்தோர் நினைவலை முற்றுமாய்
நினைத்தே முறுகுகிறேன் மனத்தில் மீட்டியே
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
22.3..23 ச

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading