நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும்சந்திப்பு
தலைப்பு
பகலவன்
————-
பகலில் வருபவன் பகலவன்
பகலைத் தருபவன் பகலவன்
காலையில் கிழக்கில் உதிப்பான்
மாலையில் மேற்கே மறைவான்
பகலவன் ஒளிபரப்ப வில்லையெனில்
விவசாயி நெல்விதைக்க முடியாதே
நெல்விதைக்கா விடில் அரிசியில்லையே
அரிசியில்லையெனில் சோறு கிடையாதே
பகலவன் வருகையால் பாரேமகிழும்
பகலில் மக்கள் சுறுசுறுப்பாவார்கள்
பகலில் திருடர் பயமில்லை
இரவில் தூக்கம்தான் வரும்
காலையில் இரைதேடும் பறவைகள்
பகலவன் மறைய கூடுவரும்
காலையில் மேய்ச்சலுக்கு செல்லும்
மந்தைகள் மாலையில் இருப்பிடம்சேரும்
பகலின்றி இரவில்லை இரவின்றி பகலில்லை
இயற்கையின் நியதி இதுவென்று
இறைவன் வகுத்த வழிஎன்றே!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan