” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கேட்டுமே நின்றுவிடு

சிவருபன் சர்வேஸ்வரி

கேட்டுமே நின்றுவிடு

மெளனம் ஏனோ நிலவும் சுடுகிறதே //
சயனமென்ன கதிரவனைக் காணலையே//
விரையமென்ன விடுதலை வரவில்லையே //
விசனமென்ன பதிலும் தருவதில்லையே //

அயராது கொட்டுகிறாய் யாரு சொல்லித்தந்தது //
புயலாக நிற்கின்றாய் சீற்றமேன் வந்தது //
துயிலாமல் சுழல் கின்றாய் சூட்சியார் செய்தது //
புலராத நாட்கள் இல்லையே புலர்துவிடு நன்றாக நீயும் //

கனவுலகுக் காரிகையே கார்மேகம் அகலட்டும் //
நினைவுலகில் வந்துவிடு நிம்மதியும் பெறவேண்டும் //
வனமது இருண்டது போல் வையகமே இருண்டுவிட்டால் //
மையல்விழி என்னாகும் மானிலத்து மாதாவே //
கேள்வியொன்றைத் தந்துவிட்டேன் கேட்டுமே நின்றுவிடு //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan