இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விடியல்

முந்தையர் வாழ்வில் முயற்சி அதிகம்
எந்தையும் தாயும் எடுத்துரைத் தனரே
சிந்தை கலங்காது சூரிய விடியலில்
முந்தி யடித்து மகிழ்வுடன் காலை

விடிவெள்ளி கண்டு விழிப்பார் விடியலில்
நொடிப்பொழு துந்தான் நேரம் கடத்தாது
விடியலைக் கண்டதும் விறுவிறுப்பு விசையாக
விவசாயம் செய்வார் வயிற்றுப் பசிபோக்க

என்னகுறை கண்டோம் எடுத்துரைத்த செயல்களிலே
இன்பமும் பெருகிய இழைப்பற்ற வாழ்வு
குன்றிலிட்ட தீபமாய் குடும்பத்தில் இருக்க
ஒன்றாய்க் கூடியே ஒற்றுமையாய் வாழ்ந்தனரே…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading