இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பாட்டி

வாட்டம் இல்லாத வலிமை ஓங்கிநிற்க
வீட்டுக் கடமைகளை வீச்சுடன் செய்திடுவார்
பாட்டியின் செயல்கள் பக்குவம் சொல்லிடும்

பள்ளிப் படிப்பைவிட பாட்டியின் கதைகள்
புள்ளியிட்டும் போட்டி பெறவும் வைத்திடுமே
பள்ளி முடிந்ததும் பூட்டியோட தனக
சுள்ளித் தடியால் துரத்திடுவார் பாட்டியன்றோ

பாட்டியென்றும் பூட்டியென்றும் பலவுறவு இருந்ததுண்டு – இன்று
வாட்டுது தனிமை வதைக்குது மனதை
கூட்டு வாழ்வும் குதூகலமும் குன்றி
பாட்டியையும் காணோம் பூட்டியையும் காணோம்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading