” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பாட்டி

வாட்டம் இல்லாத வலிமை ஓங்கிநிற்க
வீட்டுக் கடமைகளை வீச்சுடன் செய்திடுவார்
பாட்டியின் செயல்கள் பக்குவம் சொல்லிடும்

பள்ளிப் படிப்பைவிட பாட்டியின் கதைகள்
புள்ளியிட்டும் போட்டி பெறவும் வைத்திடுமே
பள்ளி முடிந்ததும் பூட்டியோட தனக
சுள்ளித் தடியால் துரத்திடுவார் பாட்டியன்றோ

பாட்டியென்றும் பூட்டியென்றும் பலவுறவு இருந்ததுண்டு – இன்று
வாட்டுது தனிமை வதைக்குது மனதை
கூட்டு வாழ்வும் குதூகலமும் குன்றி
பாட்டியையும் காணோம் பூட்டியையும் காணோம்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan