கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாசலைத் தட்டுகிறது வசந்தம்

பறக்கும் புள்ளினங்கள் பரவசம் கொள்ள
பகலவன் விழிக்க பனிமூட்டம் கலைய
திறக்கிறது வாசலைத் தித்திப்பாய் வசந்தம்
துளிர்கள் மெல்லத் தளிர்விடப் பசுமை

இயற்கையின் பரிமாற்றம் இனிமையைத் தந்திட
எடுத்தாள முடியாது இருண்டபுகை மறைக்க
செயற்கைச் சாதனம் செயல்திறன் பெருக
சுகம்தரும் வசந்தம் சுமையென விழிக்க

காலங்கள் நகருது கலியுகத் திலின்று
கதிகலங்கி மாந்தர் கழித்திடும் வசந்தம்…..

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading