மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பொறுமையின் பெருமை

எத்தனை பழமொழி ஏட்டிலே உள்ளது
அத்தனை யுமேகாண் அருமை அருமை
பொறுமைக்கு ஓர்பழமொழி பொறுத்தார் பூமியாழ்வார்
பொறுமை இழக்க பெருந்துயர் நெருங்க
வறுமை வந்து வாட்டிடும் வாழ்வை

பொறுமை இழக்க பெருக்கும் சினமும்
ஆறுவது சினம் கூறுவது தமிழ்
என்றார் ஒளவையார் அப்பன் முருகனுக்கு
ஆறுமுக்க் கடவுளரே அதில் விடுபட்டாரா?
பொறுமை பொறுமை பொக்கிஷம் மாந்தரே!

புரிதலின் பெருமையைப் பெரிதாய் எண்ணி
விரிசல் விட்டு விலகப் புவியில்
பொறுமையாய்ப் பூமியை ஆள்வோம்
புன்னகை வாழ்வில் பூத்திட வாழ்வோமே..

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading