மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பொறுமையின் பெருமை

எத்தனை பழமொழி ஏட்டிலே உள்ளது
அத்தனை யுமேகாண் அருமை அருமை
பொறுமைக்கு ஓர்பழமொழி பொறுத்தார் பூமியாழ்வார்
பொறுமை இழக்க பெருந்துயர் நெருங்க
வறுமை வந்து வாட்டிடும் வாழ்வை

பொறுமை இழக்க பெருக்கும் சினமும்
ஆறுவது சினம் கூறுவது தமிழ்
என்றார் ஒளவையார் அப்பன் முருகனுக்கு
ஆறுமுக்க் கடவுளரே அதில் விடுபட்டாரா?
பொறுமை பொறுமை பொக்கிஷம் மாந்தரே!

புரிதலின் பெருமையைப் பெரிதாய் எண்ணி
விரிசல் விட்டு விலகப் புவியில்
பொறுமையாய்ப் பூமியை ஆள்வோம்
புன்னகை வாழ்வில் பூத்திட வாழ்வோமே..

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading