பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பொறுமையின் பெருமை

எத்தனை பழமொழி ஏட்டிலே உள்ளது
அத்தனை யுமேகாண் அருமை அருமை
பொறுமைக்கு ஓர்பழமொழி பொறுத்தார் பூமியாழ்வார்
பொறுமை இழக்க பெருந்துயர் நெருங்க
வறுமை வந்து வாட்டிடும் வாழ்வை

பொறுமை இழக்க பெருக்கும் சினமும்
ஆறுவது சினம் கூறுவது தமிழ்
என்றார் ஒளவையார் அப்பன் முருகனுக்கு
ஆறுமுக்க் கடவுளரே அதில் விடுபட்டாரா?
பொறுமை பொறுமை பொக்கிஷம் மாந்தரே!

புரிதலின் பெருமையைப் பெரிதாய் எண்ணி
விரிசல் விட்டு விலகப் புவியில்
பொறுமையாய்ப் பூமியை ஆள்வோம்
புன்னகை வாழ்வில் பூத்திட வாழ்வோமே..

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading