“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
தமிழ்த்தாய்

குலதெய்வத் தாயாக்க் குலம்காக்க வந்தாள்
குழந்தையிலும் நாவினிக்கச் சொல்லாக வருவாள்
கும்பிடுவோம் குழலோசை வழியாகப் பாடி
குலத்தையுமே காத்திடவும் வேண்டிடுவோம் அவளை

புலம்பெயர்ந்து வந்தாலும் பைந்தமிழைப் படித்துப்
பாரிலுள்ள பாலகர்க்குப் பயிற்றுவித்தே நாமும்
பரவசமும் அடைகின்றோம் வளர்ச்சியுமே கண்டு
பிஞ்சுகளும் குஞ்சுகளும் பிழையின்றிக் கற்க

உலகாளும் தாயாக உள்ளமெலாம் நுழைவாள்
உருக்கொண்டும் மயக்கிடுவாள் ஒளிர்ந்துந்தான் நின்றே
ஒருநாளும் மறவேனே என்தாயை மனதால்
உன்னதமாய் நினைத்துந்தான் வணங்கிடுவேன் உன்னை

வலம்வருவாய் பூமியிலே வளமாக நீயும்
வந்தோரை வரவேற்கும் பண்பினையும் ஊட்டி
வாசலிலே கோலமிட்டும் வரவேற்போம் உன்னை
வந்திடுவாய் நொந்தமனம் துலங்கிடவே தாயே….

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading