ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

குழலோசை

குட்டி அப்பன் குழலோசை கேட்டதும்
கட்டிப் போட்டுமே காதினிக்கச் செய்திடும்
எந்த இசையும் எட்டாது பையனிசைக்கு
சந்தத்தில் ரீங்காரம் சிறப்பாக இனித்திடுமே

மந்திரத்தால் கட்டுவது மயக்கத்தைத் தருவது
சுந்தரத் தமிழாலே சுருதியுடன் பாடினாலே
புல்லாங் குழலிசைப் பாட்டு இனித்திட
சில்லென உடலை சிலுசிலுக்கச் செய்திடுமே

பூவரசம் இலையின் புல்லாங் குழலோசை
தாவரத்தின் மகிமையைத் தொல்லியமாய் சொல்லிடுமே
பூவரசம் இலையை பக்குவமாய்ப் பறித்து
புல்லாங் குழலிசையாய் பீப்பீ ஊதிடுவோம்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading