கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பிறந்தமனை

பிறந்தமனை நினைப்பு பகலிரவு உளத்தில்
இறப்புவரை என்றும் இதயத்தில் இருந்திடும்
பிள்ளைப் பருவமாய் பள்ளி சென்றது
துள்ளி விளையாடி சுறுசுறுப்புக் கண்டது

தினம்தினம் கனவில் தித்திப்பாய் வந்துவிடும்
மனமென்றும் தேடும் மனையின் வாசனை
இனந்தெரியாக் கலக்கம் இதயத்தில் உதிக்க
சினங்கொண்டே வாழ்வைச் சோம்பலுடன் நகர்த்தி

கட்டுக் கடங்கா கற்பனைக் கோட்டை
முட்டி மோதிட மூச்சு பிறந்தமனையில்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading