இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

பிறந்தமனை

பிறந்தமனை நினைப்பு பகலிரவு உளத்தில்
இறப்புவரை என்றும் இதயத்தில் இருந்திடும்
பிள்ளைப் பருவமாய் பள்ளி சென்றது
துள்ளி விளையாடி சுறுசுறுப்புக் கண்டது

தினம்தினம் கனவில் தித்திப்பாய் வந்துவிடும்
மனமென்றும் தேடும் மனையின் வாசனை
இனந்தெரியாக் கலக்கம் இதயத்தில் உதிக்க
சினங்கொண்டே வாழ்வைச் சோம்பலுடன் நகர்த்தி

கட்டுக் கடங்கா கற்பனைக் கோட்டை
முட்டி மோதிட மூச்சு பிறந்தமனையில்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading