கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ எச்சம் “

அகழாய்வு கண்டெடுத்த அற்புத எச்சம்
தகமையைக் கூறிடும் தமிழரின் வரலாறு
பகம்மை வேண்டாம் பாரினில் பாரினில் எமக்கு
சுகமாய் வாழ்வோம் சுதந்திரத் துடனே

விட்டுக் கொடுப்பு வாழ்வில் வேண்டும்
பட்டு அறிந்து பதற வேண்டாம்
கட்டுக் கோப்பில் கொட்டும் முரசு
திட்டம் போட்டுத் திடமாய் வாழ்வோம்

ஏற்றம் உண்டு எச்சம் இல்லை
போற்றும் பாரே புகழ்மாலை சூடி…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading