கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

கலவரம்

ஆடிக் கலவரம் ஆட்டிப் படைத்தது
ஓடி ஒழிந்தும் உயிர்கள் மாண்டனர்
மாறா வடுவாய் மனதை உருக்கியது
ஊறாய் இன்றும் உருக வைக்குது

மனிதம் மறந்தும் மாண்பும் குறைந்தும்
புனித வாழ்வைப் பொசுக்குது கலவரம்
கூட்டு வாழ்வில் குடும்பத்தில் கலவரம்
வேட்டு வைத்தே விலகிட வைக்கும்

நன்றும் தீதும் பிறர்தர வாரா
வென்று வாழ்வோம் வேதனை அகல…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading