” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

வசந்தத்தில் ஓர்நாள்

காரிருள் ஓட கலகலப்பை நாட
பேரிருள் கலைந்து பகலவன் வரவும்
தேரிழுக்க மாந்தர் தினமும் நாளெண்ண
வாரிச் சுருட்டி விரைவாய்ப் பனிகலைய

வசந்தமே வந்திடு வெளிச்சத்தைத் தந்திடு
கசப்பாய் இருக்குது காரிருள் மூட்டம்
உசுப்புது உடலை உபாதைகள் பெருகி
பசுமையைத் தேடுது பகலவனை நாடுது

பாடுபட்டு பறவையினக் கூட்டம்
கூடு கட்டக் குச்சிகள் தேடுது
வசந்தத்தில் ஓர்நாள் வந்திடு விரைவா
பசங்களும் தேட பல்லினமும் தேடுது…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan