கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

விருப்பு

விருப்புக் கொண்டே விவசாயம் செய்தால்
வருகின்ற காலம் வளமாய் இருக்கும்
உருக்குலையா உடலும் உளமும் உறுதியடைய
கருணை கொண்டே காக்கும் உள்ளங்கள்

உலகில் பெருக உண்டி நிரம்பும்
பலமும் கூட பெருவாழ்வு கிட்டும்
துலங்கிடும் வாழ்வு தரணியில் ஓங்கி
நிலமும் வளமாகி நானிலம் செழிக்கும்

செய்யும் தொழிலும் சிறப்பு அடைய
மெய்யை வருத்தி மேதினியில் வாழ்ந்து
விருப்பு டனேயும் வளங்களைப் பெருக்குக…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading