க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 283
ஆசான்
ஒளி தரும் ஞாயிறு போல
அறிவோளி தரும் ஆசான்
அடிகடி நினைவில் வரும்
அவர் முகம் பார்க்க
ஆசையோடு ஈழம் சென்று
இல்லம் தேடி நின்ற போது
அவர் இறந்து பல காலம்
என்றார்கள் அறிந்தவர்கள்
இழந்திட்ட பிரிவும்
எங்கிட்ட மனம்
கடந்திட்ட நாட்களை
நினைத்திட்ட பொழுதிலே
அவர் தந்த கல்வி
அதனால் வந்த பெறுபேறும்
அவர் சேவையை
போற்ற வைத்தது
என் மனதினுள்ளே !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading