” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

பனிப் பூ

ஊதி அவள்
சிரித்தாள்
மேனியிலே பட்டதால்
கூதல் என்னை தொட்டதே!

ஆடி அவள்
சுற்று கையில்
ஆகாயம் பூவாக
கொட்டவே !

வேகமாக அவள்
ஏந்த
காணாமல் போன
மாயம் ஏனடியோ !

கார் கால
இருளிலே
களங்கம் இல்லை
சொல்லடி !

பூ போன்ற
உன் இதழின்
புன்னகைக்கு விலை
என்ன சொல்லடி !

பனிப் பூவுக்கு
நன்றி சொல்வேன்
பாருக்கு பாச்சுகின்றாய்
வெண்மையை !

பாதம் பதித்து
பாதம். அளக்க
பஞ்சனையோ
சொல்லடி. ஈ……..

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan