க.குமரன்

சந்தம சிந்தும்
வாரம் 296

முகமூடி
முகமூடி காத்த
முக கவசத்திக்கு
நன்றி சொல்வோம்

வைரசு தூசி மாசு
காற்றில் கலந்து
நாசியால் வாயால்
எம்மை சேராமல்
எம்மை காத்து

முத்தத்தை குறைத்து
தொடுகையை விலக்கி
நமஸ்கரிக்க வைத்த
காலத்தை மறப்போமா?

அச்சம் கொண்டு
அளந்த இடைவெளியில்
வாழ்ந்த காலத்தை
நினைக்கையில்
முகம் மூடல்
எவ்வளவு அவசியம் !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading