க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 228

பாட்டி

மடிமீது தலை வைத்து
படுத்திட ஆசை
செவியோடு செய்தி
ஒன்று சொல்லிட. ஆசை

நினைத்தது போல
இனிமை கொண்ட உலகம்
இல்லை உணர்ந்தேன்
நம்பியவர்களின் ஏமாற்றும்
நாட்களைக் கடந்து
உணர்ந்தேன்

வெட்ட வெளி போல
தனிமை ஒன்று
எனக்குள்ளும் உண்டு
கட்டி அடக்கும்
தூக்கணாம். குருவி போல
குடும்பமும் உண்டு

முந்தானை சேலைக்குள்
அடக்கிய திண்பண்டங்கள்
இன்னும் வேண்டும்!
திண்டிட முடியா
திண்டாக் கதை
சொல்லவும் வேண்டும்!

முதிர்வு கொண்ட
உன் பேச்சும்
கனிவு கொண்ட
உன் ஸ்பரிசமும்
வேண்டும் என்றுமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

    Continue reading