மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 228

பாட்டி

மடிமீது தலை வைத்து
படுத்திட ஆசை
செவியோடு செய்தி
ஒன்று சொல்லிட. ஆசை

நினைத்தது போல
இனிமை கொண்ட உலகம்
இல்லை உணர்ந்தேன்
நம்பியவர்களின் ஏமாற்றும்
நாட்களைக் கடந்து
உணர்ந்தேன்

வெட்ட வெளி போல
தனிமை ஒன்று
எனக்குள்ளும் உண்டு
கட்டி அடக்கும்
தூக்கணாம். குருவி போல
குடும்பமும் உண்டு

முந்தானை சேலைக்குள்
அடக்கிய திண்பண்டங்கள்
இன்னும் வேண்டும்!
திண்டிட முடியா
திண்டாக் கதை
சொல்லவும் வேண்டும்!

முதிர்வு கொண்ட
உன் பேச்சும்
கனிவு கொண்ட
உன் ஸ்பரிசமும்
வேண்டும் என்றுமே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading