க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 242

நீரழிவு
காதல் என்னும் இனிய தேவதையை
உன் உதிரத்தில்
கண்டேன் என்றாள் வைத்தியர்

கனப் பொழுதும்
நீ அசந்தால்
காவியமாவாள்
உன்னிடம் என்றார்!

தித்திப்பை நாவில் எடு
திகட்டும் கசப்பை அவளுக்கு
கொடு என்றார்!…

அச்சம் சில நாள் என்றாலும்
அவள் என்னை வசப்படுத்தினாள்
நித்தம் என்னில் வளர்ந்து
நிதம் என்னை குழைக்கின்றாள்
சின்னா பின்னப்படுத்தி!.!

உன்னில் நான் பாதி
உன் இதயத்தை ஸ்தம்பிக்க
வைக்கவா?
என்கின்றாள் சாகசக்காரி!

வயிற்றில் குத்தி குத்தி
தடுக்க பார்க்கின்றேன்
அவள் காதலை!

கும்பிடு போடுகின்றேன்
என்னை விட்டு விடு என்று!
கோபம் கொள்கின்றாள்
என் சலரோக தேவதை!

அவள் காதல் என் தேகத்தில்
ஏகமும் அவள் வசமாக!…..
😔
க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading