க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 81

விடியலி்ன் உன்னதம்

கலங்கின கண்களில்
ஆனந்த கண்ணீர்
காணமல் போனவர்கள்
விடுதலை பெற்றனர்

ஏங்கிய மனைவியும்
ஏங்கிய தாயும்
ஏங்கிய தந்தையும்
ஏங்கிய உறவுகளும்
உறவு கொண்டாடின

காணிகள் மீட்கபட்டன
கேட்டவை கிடைக்க பெற்றன
ஆனந்த ஈழத்தில்
அது அன்றோ
விடியலின் உன்னதம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading