மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 81

விடியலி்ன் உன்னதம்

கலங்கின கண்களில்
ஆனந்த கண்ணீர்
காணமல் போனவர்கள்
விடுதலை பெற்றனர்

ஏங்கிய மனைவியும்
ஏங்கிய தாயும்
ஏங்கிய தந்தையும்
ஏங்கிய உறவுகளும்
உறவு கொண்டாடின

காணிகள் மீட்கபட்டன
கேட்டவை கிடைக்க பெற்றன
ஆனந்த ஈழத்தில்
அது அன்றோ
விடியலின் உன்னதம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan