மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 83

யுத்தம்

ஆக்கம் ஒன்றுக்கு
ஆகும் நாழிகை
அழிப்பதற்கு ஐந்து
நிமிடங்கள் போதுமே!

ஏற்கும் கோபம்
இடையில் போகும்
இழந்தவை மீட்பது
இயலாத காரியமே!

தெளிந்த சிந்தனை
தேசத்தை ஆளும்
ஆசையின் மோகம்
அவலத்தை தேடிடுமே!

வேல் கொண்டவன்
வேலால் மாண்டான்
மன தாழ்ச்சி பெற்றவன்
உயர்ச்சி பெறுவான் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan