இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன் 9.3.23

வியாழன் கவி
ஆக்கம் 104

வாழ்ந்தோரை போற்றுவோம்

மதி கொண்டு
வரைந்த
விதி சொன்ன
பாதை

நிலை இன்று
விதி மாறி
தடை போகின்ற
வேளை

ஒரு வார்த்தை
பிழைத்தின்று
மறு வார்த்தையாக
மாறி

சுடு வார்த்தை
பரிமாறி
மனம் கொதிக்கின்ற
போது. !

நிதம் உண்மை
வெல்லும் என்று
நீறு பூத்து
நின்று!

கடல் வானம்
மறைகின்ற
கதிரவன் போல
இன்று!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading