சகாயசீலி

இ.உருத்திரேஸ்வரன்

சகாயசீலி
அடம்பனில் பிறந்த சகாயசீலி
மாலதி என்னும் பெயரில் வீரவேங்கையானார்
திறமையைகாட்டினாள்எழுச்சிப் பெண்ணாய்
வித்தானாள் இருபதாவது அகவையில்

பெண்ணாய் தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு
பூமிக்கு 10 யப்பசி1967 இல் உதித்தவள்
இலட்சியக் கனவோடு வந்தவர் அணைத்துக்
கொண்டாள் வீரச்சாவை கோப்பாயில்

வீர வேங்கையாக புறப்பட்ட சகாயசீலி
பெண்ணாலும் முடியும் என போரிட்டார்
காலில் விழுந்த வீரப்புண்ணால் ஓடஇயலாமல்
சயனைட் அருந்தி அடைந்தார் வீரமரணம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading