கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

சக்திதாசன்

ஓடுமந்த மேகம் – தனக்குள்
பாடுமந்த கீதம்
தேடுமந்த சொந்தம் ஏனோ
தேய்ந்து கலையும் மேகம்

கீறுமந்த வர்ணம் தன்னுள்
சேர்க்குமொரு கோலம்
கலையும்போதுதானெ எமக்குப்
புரியுமந்த வேஷம்

நீறுபூத்த நெருப்பாய் மனதுள்
தகிக்கும் சொந்தக் கனல்கள்
பொழியும் பாச நீரால் தானாய்
அணையும் அந்தத் தீயும்

நீயும் நானும் தேடும் வெறும்
உறவு எனும் பந்தம்
நேரும்போது தானே தெரியும்
நேசம் கேட்கும் விலையே !

வாழ்வின் உண்மை கதையின்
வரிகள் கசக்கும் போதும்
வாழ்வின் நிலையைச் சொல்லக்
கவிஞன் முயற்சி வெல்ல . . .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading