மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

“காதலி”. பார்வைக்கும் மொழியுண்டு
படித்ததொரு பாவையிடம்
மெளனத்திற்கும் ஒலியுண்டு
புரிந்தது ஓர் பூவையினால்

விழிகளின் கலப்பினால்
விளைந்தவொரு இணைப்பினால்
கழிந்த கணங்களெல்லாம் 
பிழிந்தெடுக்கும் தனிமையுணர்வு

நிலமகளின் பொறுமை
கலைமகளின் இனிமை
தலைமகளின் கடமை
தனக்குள் கொண்ட மகிமை

ஓரக்கண்னின் பார்வை பேசும்
ஓராயிரம் கவிதை வரிகள்
நீலநயனங்கள் தாழ்த்தி அவள்
நிலத்தின் மீது வரையும் கோலம்

காதலென்னும் இனிய உணர்வு
கட்டிப் போட்டது காளைதனையே
காலம் காற்றாய்ப் பறந்த போதும்
காணாப் பொழுதுகள் கல்லாய் மாறின

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading