சக்தி சக்திதாசன்

“காதலி”. பார்வைக்கும் மொழியுண்டு
படித்ததொரு பாவையிடம்
மெளனத்திற்கும் ஒலியுண்டு
புரிந்தது ஓர் பூவையினால்

விழிகளின் கலப்பினால்
விளைந்தவொரு இணைப்பினால்
கழிந்த கணங்களெல்லாம் 
பிழிந்தெடுக்கும் தனிமையுணர்வு

நிலமகளின் பொறுமை
கலைமகளின் இனிமை
தலைமகளின் கடமை
தனக்குள் கொண்ட மகிமை

ஓரக்கண்னின் பார்வை பேசும்
ஓராயிரம் கவிதை வரிகள்
நீலநயனங்கள் தாழ்த்தி அவள்
நிலத்தின் மீது வரையும் கோலம்

காதலென்னும் இனிய உணர்வு
கட்டிப் போட்டது காளைதனையே
காலம் காற்றாய்ப் பறந்த போதும்
காணாப் பொழுதுகள் கல்லாய் மாறின

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading