சக்தி சக்திதாசன்

காலையும் விடிந்தது
கதிரவன் ஒளிர்ந்தது
கடமைகள் முடித்திட
காலம் பிறந்தது

துடித்திடும் உள்ளங்கள்
துவண்டிடும் பொழுதுகள்
தூக்கத்தில் விழிப்புகள்
துயரத்தின் சாயல்கள்

புதுப்புது வரவுகள்
பிரிந்திடும் உறவுகள்
பற்பல உணர்வுகள்
பாரினில் தினந்தினம்

பிறப்பதும் இறப்பதும்
பூமியின் சாத்திரம்
அழுகையும் சிரிப்பும்
அவனியின் அணிகலன்

இருப்பவர் என்றுமே
இங்கு நிலைப்பதில்லை
இருந்திடும் போதவரீந்த
இனியகணங்கள் மறைவதில்லை

காலங்கள் கடந்திடும்போது
கசந்திட்ட கணங்கள்யாவும்
கரைந்திடுமெனும் சத்தியம்
காற்றினில் தவழ்ந்திடுமே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading