” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

காலையும் விடிந்தது
கதிரவன் ஒளிர்ந்தது
கடமைகள் முடித்திட
காலம் பிறந்தது

துடித்திடும் உள்ளங்கள்
துவண்டிடும் பொழுதுகள்
தூக்கத்தில் விழிப்புகள்
துயரத்தின் சாயல்கள்

புதுப்புது வரவுகள்
பிரிந்திடும் உறவுகள்
பற்பல உணர்வுகள்
பாரினில் தினந்தினம்

பிறப்பதும் இறப்பதும்
பூமியின் சாத்திரம்
அழுகையும் சிரிப்பும்
அவனியின் அணிகலன்

இருப்பவர் என்றுமே
இங்கு நிலைப்பதில்லை
இருந்திடும் போதவரீந்த
இனியகணங்கள் மறைவதில்லை

காலங்கள் கடந்திடும்போது
கசந்திட்ட கணங்கள்யாவும்
கரைந்திடுமெனும் சத்தியம்
காற்றினில் தவழ்ந்திடுமே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan