மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

காலையின் மலர்வில்
கண்களும் விழித்திடும்
எதற்காகக் கலக்கம்?
இரவின் கருமையைக்
கலைப்பது விடியல்
வாழ்வின் சுமைகளை
குறைத்திடும் காலம்

விழுந்திடும் போதெல்லாம்
எழுந்திடும் வீரமும்
விரைந்திடும் வெற்றியை
பிடித்திடும் வல்லமையும்
கொண்டதே நெஞ்சமெனும்
உண்மையை உணர்ந்திட்டால்
உலகமே வசப்படும்

வானத்தின் நீலத்தை
எல்லையாய்க் கொண்டு
மேகத்தின் வெண்மையை
உள்ளத்தில் ஏந்தி
வளர்பிறையென்றே நாளும்
வளர்ந்திடும் உணர்வோடு
இரவினைக் கலைத்து
விடியலைத் தேடுவோம்

ஆயிரம் வாசல்கள்
அனைவரின் வாழ்வில்
அனைத்தையும் அறிந்தே
பயணத்தை நடத்தினால்
வருவதும் போவதும்
அவரவர் கைகளில்
வெற்றியும் தோல்வியும்
சமனெனக் கொள்ளலாம்

வரவுகள் மட்டுமே
வாழ்வினில் இல்லை
செலவுகள் இல்லாமல்
மகிழ்வுகள் இல்லை
இருப்பதைக் கொண்டு
சிறப்புடன் வாழ்ந்து
இல்லாதோர் நிலையறிந்து
இரக்கத்தை விதைத்தால்
இகமொரு சொர்க்கமே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading