” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

காலையின் மலர்வில்
கண்களும் விழித்திடும்
எதற்காகக் கலக்கம்?
இரவின் கருமையைக்
கலைப்பது விடியல்
வாழ்வின் சுமைகளை
குறைத்திடும் காலம்

விழுந்திடும் போதெல்லாம்
எழுந்திடும் வீரமும்
விரைந்திடும் வெற்றியை
பிடித்திடும் வல்லமையும்
கொண்டதே நெஞ்சமெனும்
உண்மையை உணர்ந்திட்டால்
உலகமே வசப்படும்

வானத்தின் நீலத்தை
எல்லையாய்க் கொண்டு
மேகத்தின் வெண்மையை
உள்ளத்தில் ஏந்தி
வளர்பிறையென்றே நாளும்
வளர்ந்திடும் உணர்வோடு
இரவினைக் கலைத்து
விடியலைத் தேடுவோம்

ஆயிரம் வாசல்கள்
அனைவரின் வாழ்வில்
அனைத்தையும் அறிந்தே
பயணத்தை நடத்தினால்
வருவதும் போவதும்
அவரவர் கைகளில்
வெற்றியும் தோல்வியும்
சமனெனக் கொள்ளலாம்

வரவுகள் மட்டுமே
வாழ்வினில் இல்லை
செலவுகள் இல்லாமல்
மகிழ்வுகள் இல்லை
இருப்பதைக் கொண்டு
சிறப்புடன் வாழ்ந்து
இல்லாதோர் நிலையறிந்து
இரக்கத்தை விதைத்தால்
இகமொரு சொர்க்கமே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan