30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
சக்தி சக்திதாசன்
ஞாலத்தின் மீதொரு
பவனி வந்து – அதன்
கோலத்தை பார்த்ததொரு
வியப்பன்றோ !
காலத்தின் சூட்சுமங்கள்
புரியாமல் மூலத்தைத்
தொலைத்து விட்ட வேகங்கள்
சூழலின் மாற்றங்கள்
புரியவில்லை – ஏனோ
சுழலுகின்ற காரணமும்
தெரியவில்லை
பகடைக் காய்களாக
நாமே அவனியில்
பவனி வருகின்றோம்
பெருமையுடன்
சிந்துகின்ற மணித்துளிகள்
எல்லாம் – கூறும்
சிந்தை மிகு விளக்கமொன்று
காண்பீர் உலகினிலே
முந்தி விழுகின்ற
துளிகளும் கூட
முடிகின்ற இடம்
அதே தரைதானே !
எண்ணி, எண்ணிப்
பார்க்கின்ற வேளையிலே – என்
எண்ணங்களில் பூத்து
நிற்கும் நினைவு ஒன்று
என்ன, என்ன செய்தாலும்
அது எல்லாம்
எனதென்ற எண்ணம்
வெறும் பொய்யே !
உள்ளமெங்கும் பூத்து
மணம் வீசும் – அந்த
உண்மையான உணர்வு
அன்பு ஒன்றே
உணர்ந்து கொள்ளும் போது
நெஞ்சில் அழியாமலே
உதிக்கும் அழியா
உண்மையான தெளிவு
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...