இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சக்திதாசன்

உள்ளத்தினுள்ளே அடிக்கும் உணர்வ்லைகள் அவை
உன்னுடைய பெயரைத்தானே
உரசிச் செல்கின்றன

நெஞ்சத்துள்ளே கேட்கும்
மெல்லிய சத்தம்
நீங்காமல் உச்சரிப்பது
உந்தன் நாமத்தை

காதலது கேட்காமல்
நுழைந்து விடுகிறது
கனலாக இதயத்தை
கண நேரத்தில்
போசுக்கி விடுகிறது

இமை மூடித் திறப்பதற்குள்
விழி வழியே எப்படி
இதயத்தில் நுழைந்து
தனை இருத்திக் கொள்கிறது ?

இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பின் ஓசையும்
இனியவள் உந்தன்
வதனத்தை காட்டி மறைக்கிறது

கனவுகள் என்னும் என்
உலகினில் எப்படியோ
கள்ளமாய் நுழைந்து
நீ உலவுகிறாய்

காதல் பெரும் அலையாய்
ஆர்பரித்து எழுந்து
கரையினில் வெண் நுரையாய்
மடிந்து போயிற்று

என் இதயம் என்னும்
மைதானத்தில் ஓர்
காதல் விளையாட்டு
அங்கே என் தோல்வி
உனை ஜெயிக்கப்
பண்ணி விட்டது

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading